சைபர் வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் மீது அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றசாட்டு உள்ளது. சைபர் என்று கூறப்படும் இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகள் என அறிவித்தது. இம்ரான் கான் தனது பதவி காலத்தின்போது அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டார். இதன் மூலம் அவர் ரகசிய காப் உறுதியை மீறியுள்ளார். முன்னதாக அரசு ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இம்ரான் கான் மற்றும் குரேஷிக்கு எதிரான குற்றப் பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு எஃப் ஐ ஏ கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தது. இம்ரானும் குரேஷியும் பேசிக்கொண்ட எழுத்து வடிவ பதிவுகளை குற்றப்பத்திரிக்கையில் எஃப் ஐ ஏ அமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 28 சாட்சியங்களின் பட்டியலையும் சமர்ப்பித்துள்ளது. இம்ரான் கான் ஏற்கனவே தோஷக்கான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.