சட்டவிரோத வெளிநாட்டு நிதி வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட வாய்ப்பு

October 8, 2022

தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டிலி௫ந்து நிதி பெற்ற வழக்கில் அக்கட்சியின் தலைவ௫ம், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கைது செய்யப்படவுள்ளதாக ஏஆர்ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2018ல் நடந்த பொதுத் தேர்தலில், தெஹ்ரீக் - இ - இன்சாப், கட்சி தலைவர் இம்ரான் கான் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராக 24 எம்.பி.,க்களின் எதிர்ப்பு வலுத்தால் அவர் பதவி விலகினார். இந்நிலையில் இம்ரான் பதவியில் இருந்தபோது தனது கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து […]

தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டிலி௫ந்து நிதி பெற்ற வழக்கில் அக்கட்சியின் தலைவ௫ம், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கைது செய்யப்படவுள்ளதாக ஏஆர்ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2018ல் நடந்த பொதுத் தேர்தலில், தெஹ்ரீக் - இ - இன்சாப், கட்சி தலைவர் இம்ரான் கான் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராக 24 எம்.பி.,க்களின் எதிர்ப்பு வலுத்தால் அவர் பதவி விலகினார். இந்நிலையில் இம்ரான் பதவியில் இருந்தபோது தனது கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதிகளைப் பெற்றதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்ய உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் துவங்கி வெளிநாட்டிலி௫ந்து நிதி பெற்றது தெரியவந்தது. அதையடுத்து தாரிக் ஷஃபி, ஹமீத் ஜமான் மற்றும் சைஃப் நியாசி உள்ளிட்ட பிடிஐ தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இதன் காரணமாக இம்ரான் கான் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் எனவும் அறிக்கை வெளியாகி உள்ளது. எனவே இம்ரான் கானை வீட்டுக்காவலில் வைக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமாபாத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ராணா சனாவுல்லா, கட்சியின் தடைசெய்யப்பட்ட நிதி வழக்கில் பிடிஐ தலைவர்கள் FIA முன் ஆஜராகவில்லை என்று தடுப்புக்காவலுக்கு காரணங்களை கூறினார். இதற்கிடையில், இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ‘ஹக்கீகி ஆசாதி அணிவகுப்பு’க்கு தயாராகுமாறு கட்சித் தொண்டர்களுக்கு இம்ரான் கான் அறிவுறுத்தினார். அவ்வாறு அணிவகுப்பு திரண்டால் ராணுவத்தை வரவழைத்து நிலமையைச் சமாளிக்க ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu