பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போராட்டங்கள் ஏற்பட்டு, 4 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி, அரசு சொத்துகளை விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, 14 ஆண்டு சிறை தண்டனை பெற்றனர். மேலும், ரகசிய தகவல்களை கசிய விட்டதாகவும், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, தோஷகானா ஊழல் வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் மற்ற வழக்குகளில் சிறையில் உள்ளார். இம்ரான்கானின் ஆதரவாளர்கள் விடுதலைக்காக பேரணிகள் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இஸ்லாமாபாத் செல்லும் சாலைகள் மூடப்பட்டு, பாதுகாப்புக்காக ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போராட்டங்கள் ஏற்பட்டு, 4 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.