இந்தியா, தலிபான் பாதுகாப்பு அமைச்சராக உள்ள முகமது யாகூப் முஜாஹிதுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.
காபூலில் புதன்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சக இணைச் செயலா் ஜே.பி.சிங் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இரு நாடுகளும் தங்களின் உறவுகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதில் இணக்கமாக இருந்தனர். இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளை வலுப்படுத்துவதில் ஆப்கானிஸ்தான் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது என்று கூறியுள்ளது.
2021-இல் அமெரிக்க படைகள் வெளியேறியதன் பிறகு, தலிபான் ஆட்சியை கைப்பற்றியது. இந்தியா, தலிபான் ஆட்சியை அங்கீகரிக்காமல், ஆப்கானிஸ்தானுடன் மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளில் பங்கேற்பதை விரும்புகிறது. இந்த சந்திப்புகள், அங்கீகாரமின்றி ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்வதில் இந்தியா தயார் என்பதை காட்டுகிறது.