செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதற்கான ஆதாரத்தை தேடி உலகின் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில், நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் நதி இருந்ததற்கான முக்கிய புகைப்பட ஆதாரத்தை அனுப்பியுள்ளது. இதுவரை செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரமாக அனுப்பப்பட்ட புகைப்படங்களை விட இது மிகவும் ஆழமானதாக உள்ளது.
நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர், 820 அடி உயரமான விசிறி போன்ற பாறை ஒன்றை ஆராய்ந்து வருகிறது. இந்த பாறை மடிப்புகள் வளைவானதாக உள்ளன. எனவே, இங்கு தண்ணீர் பாய்ந்து சென்றதற்கான சாத்திய கூறுகள் அதிகமாகின்றன. இதனை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் தண்ணீர் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.