கட்டடத் தொழிலாளர்கள் விபத்தின்போது உயிரிழந்தால் நிவாரணத் தொகை ரூ. 2 லட்சம்

March 17, 2023

கட்டடத் தொழிலாளர்கள் விபத்தின்போது உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளார் முகமது நசிமுத் அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் கடிதங்களில், 25.05.2022 அன்று நடைபெற்ற 79வது வாரிய கூட்டத் தீர்மானம் இனம் 5-ன்படி, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும், தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000/-லிருந்து […]

கட்டடத் தொழிலாளர்கள் விபத்தின்போது உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளார் முகமது நசிமுத் அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் கடிதங்களில், 25.05.2022 அன்று நடைபெற்ற 79வது வாரிய கூட்டத் தீர்மானம் இனம் 5-ன்படி, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும், தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடுமாறு கோரியுள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நல நிதி செலுத்தும் தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1.00,000/-லிருந்து ரூ.2.00.000/- ஆக உயர்த்தி வழங்கவும், இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகையினை 01.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu