கோயம்பேட்டில் தக்காளி விலை உயர்வால் விற்பனை குறைவு

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளது. தமிழகத்தில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.1300-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் அதிகாலையில் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்ததால் ஒரு பெட்டி தக்காளி ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டாததால் விற்பனை […]

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளது.

தமிழகத்தில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.1300-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் அதிகாலையில் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்ததால் ஒரு பெட்டி தக்காளி ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டாததால் விற்பனை குறைந்துள்ளது.

மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.110-க்கும், வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.130 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி உற்பத்தி நடக்கும் பட்சத்தில் தக்காளி விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu