மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஈரோடு ஜவுளி துறையினர் கடைகளை அடைத்து ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருமான வரி சட்டத்தில் 43 B(h) - ஐ மாற்றம் செய்து மத்திய அரசு ஒரு புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது அது மார்ச் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்று இருந்தால் அவை வருமானமாக கருதப்பட்டு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்டம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இது சிறு, குறுதொழில்கள் மற்றும் ஜவுளி சார்ந்த துறைகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சட்டத்தை ஓராண்டு தள்ளி வைக்க வேண்டுமென ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஜவுளி வியாபாரிகள் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.