இன்டெல் நிறுவனத்தில் 140 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கலிபோர்னியா கிளையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பணி நீக்கத்தில் பங்கேற்றுள்ள இன்டெல் நிறுவனத்திற்கு இது அடுத்த சுற்றுப் பணி நீக்கமாக அமைந்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள ஃபோல்சாம் அலுவலக வளாகத்தில் பணியாற்றும் 89 பேர் இந்த முறை நீக்கப்பட உள்ளனர். மீதம் உள்ள 51 பேர், சான் ஜோஸ் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மென்பொருள் உருவாக்க துறையில் அதிக எண்ணிக்கையிலான பணி நீக்கம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது தவிர, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, கிராபிக் ப்ராசசிங் யூனிட் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களும் நீக்கப்பட உள்ளனர். வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என இன்டெல் கூறியுள்ளது.