அமெரிக்க மருத்துவர்கள் குழு, உலகிலேயே முதல் முறையாக, கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். மிகவும் அரிய வகை ரத்த நாள குறைபாடாக கருதப்படும் Venus of Galen Malformation ஆல் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு, மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு மூளையிலிருந்து இதயத்திற்கு செல்லும் நரம்பு சரியாக உருவாகாமல் இருக்கும். இதன் காரணமாக, பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும். மேலும், குழந்தை பிறந்தவுடன் இதய செயலிழப்பு ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வித குறைபாட்டுடன் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் சிறிய காலத்திற்குள் இறந்து விடுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், குழந்தைகள் குறிப்பிட்ட நிலைக்கு வளர்ந்த பிறகே, இது தொடர்பான அறுவை சிகிச்சைகள் பொதுவாக மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக, 34 மாத கர்ப்ப காலத்தில், இந்த சிகிச்சை செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.