தென் ஆப்பிரிக்காவில் 9 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலையை நாளை திறக்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா டர்பனில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும், கிளர்வுட் தமிழ் கள்வியாலயம் மற்றும் விஐபி உலக தமிழ் சங்கமும் இணைந்து பண்பாட்டு நிகழ்வை நடத்துகின்றனர். இதில் விஐபி உலக தமிழ் சங்க நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் 9 அடி உயரம் உள்ள 157 வது திருவள்ளுவர் சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். இதில் நேரடியாக பல்வேறு தமிழ் அறிஞர்கள் மலேசியாவில் இருந்து கலந்து கொள்கின்றனர். மேலும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர், கிளர்வுட் உலக தமிழ் கல்வியின் தலைவர் தமிழ் சங்க செயல்பாட்டின் தலைவர் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.