சென்னையில் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இரும்பு மற்றும் ரசாயன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானத்துறையினர் சென்னையில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வேப்பேரியில் உள்ள தனியார் நிறுவனம், பூங்கா நகரில் உள்ள தனியார் நிறுவனம் மற்றும் மாதவரம் பூங்கா நகரில் உள்ள இரண்டு தனியார் நிறுவனங்கள் இரும்பு பொருட்கள் மற்றும் ரசாயனம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யும் நான்கு நிறுவனங்கள் ஆகியவை முறையாக வருமான வரியை கட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று சோதனை நடைபெற்றது. மேலும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆராய்ச்சி பிரிவு அலுவலகங்களிலும், அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகம் செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான 10 க்கும் மேற்பட்ட இடத்தில் சோதனை நடைபெற்று வந்தது. இவை தவிர சென்னை, எழும்பூர், ருக்மணி லட்சுமிபதி சாலையிலும் சவுகார்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் மாதவரம் நடராஜன் சாலையில் உள்ள குடோன் மற்றும் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றன. சென்னையில் இருபது இடங்களில் நடைபெற்று வருகின்ற சோதனை முடிவில் இது தொடர்பாக கிடைத்த ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படும்.