சென்னை நந்தனத்தில் உள்ள மின்நிதி உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் நேற்று மாலை 4:00 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இரவிலும் நீடித்து இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மின் நிதி மேம்பாட்டு கழகம் கட்டிய வருமான வரியை விட இந்த ஆண்டு மிகவும் குறைவான வரி கட்டப்பட்டுள்ளது. வருமான வரித்துறையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் ஆவணங்களை நேரில் சென்று சரிபார்த்து ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் மின் நிதி மேம்பாட்டு கழகம் பெற்றுள்ள வருவாய் எவ்வளவு? முறையாக வரி கட்டப்பட்டுள்ளதா? போன்ற தகவல்களை விசாரித்து வருகின்றனர்.