வருமான வரி செலுத்துவதற்கு ஜனவரி 15 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2024-2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ந்தேதி கடைசிநாள் இருந்தது. அதனைத் தவற விட்டவர்கள், டிசம்பர் 31-ந் தேதி வரை அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய முடிந்தது. இவர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம். ஆனால், ரூ.5 லட்சம் அல்லது அதற்குரிய குறைந்த வருமானம் பெற்றவர்களுக்கு, ரூ.1,000 அபராதம் செலுத்தினால் போதும்.இதற்கிடையில், மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரி செலுத்த வேண்டிய காலக்கெடுவை நீட்டித்து, ஜனவரி 15-ந்தேதி வரை தாமதமாக அல்லது திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய அனுமதித்துள்ளது.