உள்ளாட்சி தேர்தலின் போது ஏற்படும் உயிரிழப்பு அல்லது காயமடையும பணியாளர்களுக்கான நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் குண்டு வெடிப்பு, சமூக விரோத தாக்குதல் போன்ற காரணங்களால் உயிரிழப்பு ஏற்படும் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது அதன்படி 10 லட்சத்திலிருந்து ரூபாய் 30 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது. பிற காரணங்களால் உயிரிழப்பவர்களுக்கான நிவாரணம் 5 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத் தொகை 2.5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது. சிறுகாயம் ஏற்பட்டவர்களுக்கு வழங்கும் நிவாரணம் 10000- த்திலிருந்து 40000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது