நாட்டில் சமையல் பொருட்கள் பொருட்களின் விலை உயர்வால் சைவ உணவின் விலை 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
நாட்டில் சமையல் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதில் வீட்டில் சமைக்கப்படும் சைவ உணவின் விலை 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது குறித்து கிரிசில் மார்க்கெட் இண்டலிஜென்ஸ் மற்றும் ஆனலிடீஸ் மதிப்பீட்டின்படி, வீட்டில் சமைக்கப்படும் சைவ உணவின் விலை ஏப்ரல் மாதத்தில் 8% அளவு உயர்ந்துள்ளது. அதே மாதிரி அசைவ உணவின் விலை நான்கு சதவீதம் குறைந்துள்ளது. இது வெங்காயம், தக்காளி உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை உயர்வு அதிகரித்ததால் சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த வரத்து காரணமாக அரிசி மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை ஆண்டுக்கு 14 சதவீதமாக மற்றும் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று சீரகம் மிளகாய் எண்ணெய் ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்து உள்ளது