மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அகவிலைப்படி உயரும் பொழுது வீட்டு வாடகை படியும் அதற்கு ஏற்றார் போல் உயர்த்தப்படும். ஆனால் இதுவரை வீட்டு வாடகை படிக்குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து ருத்ரா மற்றும் ருத்ரா சட்ட அலுவலக நிறுவனர் ஒருவர் கூறுகையில் மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை படியானது ஊழியர் எந்த வகை நகரத்தில் வசிக்கிறார் என்பதை பொறுத்து அமையும் என்று கூறியுள்ளார்.தற்போது அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறகு வீட்டு வாடகைப்படி விகிதங்கள் 30, 20 மற்றும் 10 சதவீதம் என திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 35 ஆயிரம் அடிப்படை சம்பளம் பெறக்கூடிய மத்திய அரசு ஊழியர்கள் முதல்கட்ட நகரத்தில் வசிக்கும் பட்சத்தில் வீட்டு வாடகைப்படி 10500 வழங்கப்படும். இரண்டாம் கட்ட நகரவாசிகளுக்கு வீட்டு வாடகைப்படி 7000 ஆகவும், மூன்றாம் கட்ட நகர வாசிகளுக்கு வீட்டு வாடகைப்படி 3,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.