தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பதில்லை. இதனால் காசிமேடு மார்க்கெட் பகுதிக்கு மீன்கள் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.மேலும் மீன்கள் விலை வழக்கத்தைவிட இரண்டு அதிகரித்து காணப்படுகிறது. இதை போல் சிறிய வகை மீன்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அதேபோல் கோழி இறைச்சி விலையும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறும் பொழுது அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இக்காலகட்டத்தில் கேரளாவில் இருந்தே மீன்கள் அதிக அளவு வரும். தற்போது மழை எச்சரிக்கையால் அங்கும் மீன்பிடிப்பது பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீன்களின் வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக மீன் விலை உயர்ந்துள்ளது. மீன்பிடித்தடை காலம் முடியும் வரை விலை உயர்வு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்














