காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்வரத்து ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் , ஊட்டமலை, உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கலில் வினாடிக்கு 2000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து வருகிறது. மேலும் கோடை விடுமுறை முடிய இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் அங்கு பயணிகள் குவிந்து வருகின்றனர்