கடந்த மூன்று மாதமாக எரிபொருள்களின் விலை உயர்ந்து வருவதால் உள்நாட்டு விமான நிலையங்களில் டிக்கெட் விலை அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் உள்நாட்டு விமான சேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காக செலவு செய்கின்றனர். இந்த நிலையில் எரிபொருளின் விலை கடந்த மூன்று மாத காலமாக தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் இண்டிகோ ஏர்லைன்ஸ் நேற்று முதல் விமான கட்டணத்தை ரூபாய்.300 முதல் ரூபாய் 1000 வரை உயர்த்தியுள்ளது. இது 500 கி.மீ வரை ரூபாய் 300 முதல் 3500 கி.மீ க்கு மேல் ரூபாய் 1000 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இண்டிகோ விமான நிறுவனம் விலை ஏற்றத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் விலைகளை விரைவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.