குஜராத்தில் தானிய ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
நாளை உலக தானியங்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது, இது தானியங்களைப் பயிரிடுதல் மற்றும் உற்பத்தி செய்தலை ஊக்குவிக்கும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் இந்தியா தானியங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் விளங்குகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரை, குஜராத்தில் இருந்து 2 லட்சத்து 47 ஆயிரத்து 789 டன் தானியங்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.குஜராத், துவரம் பருப்பு, உளுந்து மற்றும் பச்சைப்பயறு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளதுடன், அவர்கள் நவீன வேளாண் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.