தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி 01.07.2024 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலை படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வகையில் 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.














