தமிழகத்தில் மூன்று மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. மேலும் மழைநீரில் கொசுக்கள் தேங்குவதால் உற்பத்தி அதிகமாகி டெங்கு காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கின்றது. இதுவரை சென்னையில் அதிகளவிலான சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது மேலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த மாதம் தொடக்கம் முதல் தமிழகத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை ஒட்டி பொது சுகாதாரத்துறை தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டை விட சென்னை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இதுவரை அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் வரை 4454 இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.