மாநகரப் போக்குவரத்து கழக ஓட்டுநர் நடத்துனர்களுக்கு மிகை பணி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு நாட்கள் மற்றும் இரட்டைப்பணி செய்யும் போது வழங்கப்படும் மிகைப் பணி ஊதியத்தை உயர்த்து தருமாறு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச மிகை பணி ஊதியத்தை ஓட்டுநர்களுக்கு ரூபாய். 600 இல் இருந்து 800 ஆகவும், நடத்துனர்களுக்கு 590லிருந்து 790 ஆகவும் உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்துகளை மாற்றுப் பாதையில் இயக்குவதாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் பயண நடைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை. இன்று போன்ற நேரங்களில் மிகைப்பணி உதயத்தை குறைக்காமல் முழுமையாக வழங்கினால் அனைத்து பேருந்துகளையும் இயக்க முடியும் என தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் வேண்டுகோள் வைத்தனர். அதன்படி முழு மிகைப்பணி ஊதியம் வழங்க நிர்வாகத்தின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆர்பி ஜான் வர்கீஸ் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.