முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய தொகையை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய தொகையை உயர்த்துவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் இன்று அறிவித்தார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் உறுப்பினர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் ஓய்வூதிய உயர்வை கோரி கேட்டிருந்ததை முதல்வர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது வழங்கப்படும் ரூ.30,000 மாத ஓய்வூதியம் ரூ.35,000 ஆக 1-4-2025 முதல் உயர்த்தப்படும்.
குடும்ப ஓய்வூதியம் ரூ.15,000 இருந்து ரூ.17,500 ஆக அதிகரிக்கப்படும்.
அதேபோல், ஆண்டுதோறும் வழங்கப்படும் மருத்துவ உதவி தொகையும் ரூ.75,000 இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்றும், ஏற்கனவே வழங்கிய தொகைக்கு மீதமுள்ள ரூ.25,000 உரிய திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.