தமிழகத்தில் மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு

தமிழகத்தில் மின் உற்பத்தி திறன் 36 ஆயிரத்து 671 மெகா வாட்டாக அதிகரித்துள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2021 இல் பொறுப்பேற்றது முதல் மின் உற்பத்திக்காக பல்வேறு புதிய நலத்திட்டங்களை உருவாக்கி வருகிறார். இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க ஆணையிட்டு உள்ளார். ஆட்சி பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டில் 32595 மெகா வாட்டாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் இன்று […]

தமிழகத்தில் மின் உற்பத்தி திறன் 36 ஆயிரத்து 671 மெகா வாட்டாக அதிகரித்துள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2021 இல் பொறுப்பேற்றது முதல் மின் உற்பத்திக்காக பல்வேறு புதிய நலத்திட்டங்களை உருவாக்கி வருகிறார். இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க ஆணையிட்டு உள்ளார். ஆட்சி பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டில் 32595 மெகா வாட்டாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் இன்று 36 ஆயிரத்து 671 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 454.32 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும், 20 ஆயிரத்து 830 மெகாவாட் உச்சமின் தேவையும் எவ்வித தடங்களும் இன்றி வழங்கி வருகிறது. மேலும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச மின் உற்பத்தி 40.50 மில்லியன் யூனிட்டுக்களும் தமிழ்நாடு மின்சார தேவைகளுக்காக ஈடு செய்வதில் பெரிதும் துணைபுரிந்து வருகின்றன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu