தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் தயாரிப்பில் இனிப்பு பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆவின் நிறுவன தயாரிப்பு பொருட்கள் ஆன பன்னீர், பட்டர், சீஸ் ஆகியவை சந்தையில் அதிகமாக தேவைப்படுகின்றன. இது சுவையானதாகவும், தரமாகவும் இருப்பதால் சந்தையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25% இனிப்பு பொருட்களின் தேவை அதிகமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதனால் இனிப்பு பொருள்களின் உற்பத்தி அதிக படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் என நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான தயாரிப்பு பணி நடைபெற்று வருவதாகவும், படிப்படியாக பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.