பாகிஸ்தான் எல்லை அருகில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு

December 26, 2022

பாகிஸ்தான் எல்லை அருகில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மொத்தம் 2,289 கிமீ சர்வதேச எல்லை உள்ளது. இதில், காஷ்மீரில் மட்டும் 772 கிமீக்கு எல்லை கட்டுப்பாடு கோடு உள்ளது. போர் ஒப்பந்தத்தை மீறி கடந்த செப்டம்பர் 6ம் தேதி, ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கசூடு நடத்தியது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் ராணுவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் […]

பாகிஸ்தான் எல்லை அருகில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மொத்தம் 2,289 கிமீ சர்வதேச எல்லை உள்ளது. இதில், காஷ்மீரில் மட்டும் 772 கிமீக்கு எல்லை கட்டுப்பாடு கோடு உள்ளது. போர் ஒப்பந்தத்தை மீறி கடந்த செப்டம்பர் 6ம் தேதி, ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கசூடு நடத்தியது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் ராணுவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை இந்திய ராணுவம் செய்து வருகிறது.

இது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பதுங்கு குழிகள், எல்லை வேலி சீரமைப்பு, ராணுவ டாங்குகள் முன்கள பகுதிக்கு வர வசதியாக சரிவு பாதை அமைத்தல், கண்காணிப்பு டவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மூலம் இந்த பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu