மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் கவனிக்கத்தக்க வளர்ச்சி காணப்படுகிறது. தொகுப்பாக 3 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
2025-ம் ஆண்டு கல்விக்காலத்திற்கு தமிழக அரசுப் பள்ளிகளில் 3,12,881 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னையில் அதிகபட்சமாக 17,985 மாணவர்களும், நீலகிரியில் 1,327 பேரும் சேர்க்கை பெற்றுள்ளனர். கே.ஜி வகுப்புகளில் மட்டும் 22,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் 1.7 லட்சம் மாணவர்களும், ஆங்கில வழியில் 52,000 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். குறைவாக மாணவர் சேர்க்கை பதிவான மாவட்டங்களில், சேர்க்கையை மேம்படுத்தும் பணியை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.