ஆவின் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது 18ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பசும்பால்,எருமைப்பால் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இதில் பசும்பாலின் விலை லிட்டருக்கு 35 இலிருந்து 38 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு 44 இல் இருந்து 47 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.