ஆந்திராவில் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தம் மூலம் வேலை நேரம் உயர்த்தப்பட்டு, சில உரிமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பெரும் விவாதத்துக்கும் எதிர்ப்புக்கும் வழிவகுத்துள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான NDA அரசு, தினசரி வேலை நேரத்தை 9 மணியிலிருந்து 10 மணியாக உயர்த்தியுள்ளது. இனி 6 மணிநேரம் வேலை செய்த பிறகு ஒரு மணிநேர ஓய்வு வழங்கப்படும் என அமைச்சர் பார்த்தசாரதி தெரிவித்தார். கூடுதல் நேர வேலை 75 மணி நேரத்தில் இருந்து 144 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு இரவு ஷிஃப்டில் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார். எனினும், CPI உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஜூலை 9-ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.