தமிழக கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு திறந்து விடப்படும் நீர் திறப்பு கடந்த ஆறு மாத காலமாக முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் காவிரி ஆற்றின் நீர்வரத்து 200 கன அடியாக சரிந்தது. மேலும் வெப்பம் வீசி வந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகள் காட்சியளிக்கபட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்து வரும் கோடை மழையின் காரணமாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியிலிருந்து 3000 கன அடி வரை உயர்ந்தது. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கலில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்