சீனாவில் புதிய எச்.எம்.பி.வி வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
2019-ம் ஆண்டில் சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது, சீனாவில் புதிய எச்.எம்.பி.வி என்ற வைரஸ் பரவி வருவதால் மக்கள் கவலையில் உள்ளனர். இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால், சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பரவல் மிகுந்துள்ளது. இதனால், ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கூட்டம் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இவை குளிர்காலத்தில் வழக்கமானவை என்று அரசு கூறினாலும், பொதுமக்களிடையே பயம் நிலவுகிறது.