தமிழகத்தில் பெண்களுக்கு இரத்த சோகை பிரச்சினை அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் ரத்தசோகை பிரச்சனை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசு 15-49 வயது இடையிலான பெண்களில் ரத்தசோகை பாதிப்பு தொடர்பாக ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதன் படி, இந்தியாவின் பல பகுதிகளில் அதிக ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் காணப்பட்டுள்ளனர். லடாக் யூனியன் பிரதேசத்தில் 92.8%, மேற்கு வங்காளத்தில் 71.4%, திரிபுராவில் 67.2%, ஜம்மு-காஷ்மீரிலும் அசாம் மாநிலங்களிலும் 65.9% மக்கள் ரத்தசோகைக்கு உள்ளாகியுள்ளனர்.
அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகள் பற்றிய விகிதங்கள் கூறும் போது, லட்சத்தீவுகளில் 25.8%, நாகாலாந்தில் 28.9%, மணிப்பூரில் 29.4%, மற்றும் மிசோரம் மாநிலத்தில் 34.8% மக்கள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதன் பரவல் 53.4% மற்றும் புதுச்சேரியில் 55.1% ஆக உள்ளது. இந்த கணக்கெடுப்பு 2019-2021ஆம் ஆண்டுகளில் மத்திய சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியாவின் அதிக ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு 22-வது இடத்தில் உள்ளது.