டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் மாபெரும் பேரணி நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கையின் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. இவரை மார்ச் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் குறிவைக்கப்படுவதாக குற்றம் சாட்டியும், கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தியா கூட்டணி தலைவர்கள் வரும் மார்ச் 31-ஆம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக இதனை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். அதில் எதிர்க்கட்சிகளை குறிவைத்து சமீபத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.