இந்தியா என்ற பெயரில் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இதில் கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே மூன்று முறை சந்தித்துள்ள நிலையில் இதன் நான்காவது கூட்டம் இன்று டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து கூட்டணி தலைவர்களும் டெல்லி சென்றுள்ளனர். இதில் திமுக தலைவர் மு,க ஸ்டாலின், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனர். இதில் பாராளுமன்ற தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.