புதிய மின்சார வாகன கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு வரி சலுகையை அறிவித்துள்ளது. இதனால், மின்சார வாகனங்களின் முதன்மை உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் என கூறியுள்ளது. இந்திய அரசின் இந்த அறிவிப்பு டெஸ்லா போன்ற மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி கட்டமைப்புகளை வலுப்படுத்த 500 மில்லியன் டாலர்களுக்கும் மேல் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த சூழலில், மின்சார வாகனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்படும் வரியை குறைப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனால் அந்நிய முதலீட்டுடன் உள்நாட்டு தயாரிப்பு அதிகரிக்கும் என கூறியுள்ளது. மேலும், குறைந்தபட்சம் 500 மில்லியன் டாலர்கள் (4150 கோடி) முதலீடு செய்யப்பட வேண்டும் என கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஆத்ம நிர்பார் இலக்கை அடைவதற்கு மிகவும் துணை புரியும் என கூறப்படுகிறது.