இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே உள்ள எல்லை வழியாக அதிகமானோர் சட்டவிரோதமாக புலம்பெயர்வு செய்கின்றனர். எனவே, எல்லை பாதுகாப்பு தொடர்பாக ஆண்டுக்கு இருமுறை பேச்சுவார்த்தை நடைபெறும். கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில், சட்டவிரோத ஊடுருவலை தடுப்பதற்கு இருநாட்டு எல்லையை மூட திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச எல்லை பாதுகாப்பு படை தலைவர் நஜ்முல் ஹசன் மற்றும் இந்திய எல்லை பாதுகாப்பு படை தலைவர் சுஜாய் லால் தவ்சென் ஆகியோர், இந்த தகவலை கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
எல்லைகளை மூடுவதால், கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்பாடுகள், எல்லை தாண்டிய குற்றங்கள் ஆகியவை குறையும் என தெரிவித்துள்ளனர். அதே வேளையில், இந்திய வங்கதேச எல்லைப் பகுதியில், பாலம் அமைத்தல், சாலைகளை பழுது பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக கூறியுள்ளனர். அத்துடன், இருநாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட உள்ளதாக உறுதியளித்துள்ளனர்.