இந்தியா வங்கதேசம் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

September 6, 2022

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று இந்தியா வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார். அப்போது, இரு […]

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று இந்தியா வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இது குறித்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, " வங்கதேசம் இந்தியாவின் மாபெரும் வர்த்தக உறவு நாடாக இருக்கிறது. இரு நாட்டு மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பு உணர்வும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. இரு நாடுகளும் நட்பு நாடுகளாக வளர்ந்துள்ளன. கடந்த ஆண்டு, வங்கதேசத்தின் 50 ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்தியா பங்கு பெற்றது. எனவே, இனி வரும் காலங்களில், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு புதிய உச்சம் தொட்டு சாதனை படைக்கும். இந்தச் சந்திப்பில், தகவல் தொழில்நுட்பத் துறை, விண்வெளி மற்றும் அணுசக்தி துறை போன்றவற்றில் ஒத்துழைப்புடன் செயல்பட முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான மின் பகிர்வு இணைப்புகளை அமைக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார். பின்னர் பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, "உக்ரைன் - ரஷ்யா போரின் போது, போலந்துக்கு தப்பிச்சென்ற வங்கதேச மாணவர்களை, இந்திய மாணவர்களை மீட்டது போலவே, பத்திரமாகச் சொந்த நாட்டுக்கு இந்தியா கொண்டு சேர்த்தது. அத்துடன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நட்பு ரீதியில் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையில் வேற்றுமை இருந்தாலும், அதனை பேச்சுவார்த்தை மூலம் கலைந்துள்ளோம். இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேன் மேலும் வலுப்பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu