இந்தியா - வங்கதேச ரயில் சேவை விரைவில் தொடக்கம்

October 31, 2023

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது.இதனை வலுப்பெற செய்யும் வகையிலும், இருநாட்டுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும் பயண தூரத்தை குறைக்கும் வகையிலும் ஐந்து கிலோ மீட்டருக்கு பாதை அமைத்து ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி அகர்தலா - அவுகரா எல்லை தாண்டிய இணைப்பு ரயில் சேவை என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில் ஐந்து கிலோமீட்டர் தூரம் இந்தியாவில், 10 கிலோ மீட்டர் […]

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே ரயில் சேவை துவங்கப்பட உள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது.இதனை வலுப்பெற செய்யும் வகையிலும், இருநாட்டுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும் பயண தூரத்தை குறைக்கும் வகையிலும் ஐந்து கிலோ மீட்டருக்கு பாதை அமைத்து ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
அதன்படி அகர்தலா - அவுகரா எல்லை தாண்டிய இணைப்பு ரயில் சேவை என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில் ஐந்து கிலோமீட்டர் தூரம் இந்தியாவில், 10 கிலோ மீட்டர் தூரம் வங்கதேசத்திலும் நீள்கிறது.
இந்த சேவை இந்தியாவின் திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா முதல் வங்கதேசத்தின் அகவுரா நகர் வரை செல்கிறது. இடையில் இருநாட்டு எல்லைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச குடியேற்ற மைய ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும். அங்கு பயணிகளின் பாஸ்போர்ட் ஆகியவை பரிசோதிக்கப்படும். இதன் மூலம் அகர்தலாவில் இருந்து கொல்கத்தாவை அடைய 31 மணி நேரம் எடுக்கும் பயணம் நேரம் 10 மணி நேரம் குறையும். மேலும் இந்த திட்டத்திற்காக ரூபாய் 155 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த சேவையை நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொளி மூலமாக தொடங்கி வைக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu