உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.
நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பாட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்கள் எடுத்தது. 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாட தொடங்கியது. இதில் கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்களை குவித்தார். மேலும் இதில் 16
பவுண்டரிகளும், ஐந்து சிக்ஸர்களும் அடங்கும். பின்னர் களமிறங்கிய விராட் கோலி அரைசதம் எடுத்தார். இதன் மூலம் இந்தியா 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.