உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோதின.
உலக கோப்பை 2023 தொடர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே அக்டோபர் 14ஆம் தேதி போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. இதில் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட்டை தொடங்கி 86 ரன்களை குவித்தார். அதனை தொடர்ந்து சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தில் 30.3 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்து இந்தியா வெற்றி பெற்றது.
இதேபோல் அக்டோபர் 15ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதனை அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது. பின்னர் இங்கிலாந்து 285 ரன்கள் என்னும் இலக்கை நோக்கி களம் இறக்கியது. இதில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் தொடர்ந்து ஆட்டம் இழந்தனர். 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்கள் எடுத்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.