சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சாதனையை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளின் கருப்பொருள் "நிலவைத் தொடும் போது வாழ்க்கையைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சாகா" என்பதாகும். இது, இந்தியாவின் விண்வெளி முயற்சிகள் உலகின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இளைஞர்களை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட ஊக்குவிக்குப்பதாக அமைகிறது.