லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும் சீனாவும் சம்மதம் தெரிவித்து உள்ளன.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும், சீனாவும் சம்மதித்துள்ளன என கூறப்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு தலைநகர் டெல்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறுகிறது. இதில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாங்பூ பங்கேற்கிறார். அப்போது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவர் சந்தித்துப் பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சினை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.