சீனா - இந்தியா இடையிலான உறவு - சீன வெளியுறவுத்துறை அறிவிப்பு

September 8, 2023

இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங் பங்கேற்க விட்டாலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நன்றாக இருக்கிறது என சீன வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. டெல்லியில் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் சீனப் பிரதமர் லீ கியாங் கலந்து கொள்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை என கடந்த திங்கள் கிழமை தெரிவிக்கப்பட்டது. […]

இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங் பங்கேற்க விட்டாலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நன்றாக இருக்கிறது என சீன வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

டெல்லியில் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் சீனப் பிரதமர் லீ கியாங் கலந்து கொள்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை என கடந்த திங்கள் கிழமை தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, சீனா-இந்திய இடையிலான உறவு நிலையாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படுவது இரு நாட்டு மக்களுக்கும் நல்லது.

ஜி 20 அமைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுத்து பங்கேற்று வருகிறது என்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் சீனா அதன் புதிய வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம், அக்ஷய் சின் ஆகிய பகுதிகளை இணைத்து இருந்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதில் தற்போது சீனா இந்தியா உறவு நிலையாக உள்ளது என அந்நாடு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu