இந்திய-சீன உறவு ஆரோக்கியமாக இல்லை - வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கர்

இந்திய - சீன உறவு ஆரோக்கியமாக இல்லை என்று இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங்-கிடம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இந்நிலையில், டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, கின் காங் சந்தித்தது 2020க்குப் பிறகு நடைபெற்ற […]

இந்திய - சீன உறவு ஆரோக்கியமாக இல்லை என்று இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங்-கிடம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இந்நிலையில், டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, கின் காங் சந்தித்தது 2020க்குப் பிறகு நடைபெற்ற முதல் உயர்மட்ட சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், இந்தியா - சீனா இடையே தற்போது நிலவும் உறவு அசாதாரணமாக இருக்கிறது. இந்தியா - சீனா இடையே இருக்கும் உண்மையான பிரச்சினை, வெளிப்படையாகவும் நேர்மையாகவும் விவாதிக்கப்பட வேண்டும்.

எங்கள் உரையாடலின் பெரும்பகுதி இருதரப்பு உறவு தொடர்பானதாகவே இருந்தது. குறிப்பாக, இருதரப்பு உறவில் உள்ள சவால்கள் குறித்தும், எல்லையில் அமைதி நிலவ எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துமே நாங்கள் விவாதித்தோம் என தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu