ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது.
பஹல்காம் பயணிகள் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுடன் உள்ள அனைத்து உறவுகளையும் துண்டித்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், பாகிஸ்தானிய விமானங்களுக்கு இந்திய வான்வெளியில் தடை, பாகிஸ்தானியர்களை வெளியேற்றல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் தங்களது தரப்புகளை வெளிப்படுத்த இருக்கின்றனர். பாதுகாப்பு கவுன்சில் தலைவர், பயங்கரவாதத்தை எதிர்த்து அனைத்து தரப்பும் ஒன்று சேர வேண்டும் என்றும், பதற்றம் கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.