ஆப்கானிஸ்தான் நாட்டில் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு உதவும் பொருட்டு, 10000 மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா தானமாக வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரத்தை இந்தியாவின் கோதுமை சென்றடைந்துள்ளதாக ஐநா சபையின் உணவு திட்ட அமைப்பு ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானில் வறுமையில் வாடும் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், இந்தியா 40000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. அதன் பின்னர், கடந்த மாதம் 20000 மெட்ரிக் டன் கோதுமை மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி இந்திய அரசு சார்பில் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஐநா சபையின் உணவு திட்ட அமைப்பான UNWFP இந்தியாவிற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளது.