பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புக்கான நிவாரண நிதியாக இந்தியா 8 கோடி அளித்துள்ளது.
பப்புவா நியூ கினியாவில் உள்ள உலாவுன் மலையில் எரிமலை வெடித்தது. இதனால் சுமார் 26-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பகுதியில் இந்த வெடிப்பு காரணமாக பேரழிவு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது. இந்த வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க பப்புவா நியூ கினியா நாட்டிற்கு நிவாரண உதவியாக 8 கோடி ரூபாய் அளித்துள்ளது இந்தியா. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்த இயற்கை பேரழிவினால் ஏற்பட்ட நெருக்கடியின் போது இந்தியா பப்புவா நியூ கினியா உடன் உறுதியாக நிற்கிறது. உடனடி நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இரு நாடுகளின் ஒற்றுமையின் அடையாளமாக அங்கு புனரமைப்பு முயற்சிகளுக்கு இந்திய அரசு உதவும் வகையில் 8 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.