எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு இறுதி செய்யப்பட்டது.ஆளும் பாஜகவை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிர்ப்பதற்காக 28 எதிர் கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தது. இதில் மூன்று கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உட்பட 28 கட்சிகள் உள்ளன. இதில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை செப்டம்பர் 30ம் தேதிக்குள் உறுதி செய்யப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தற்போது 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் வீட்டில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரச்சாரம் குறித்த விஷயங்கள், தொகுதி பங்கீடு குறித்த விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.